Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் தீ பரம்பல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ணுற்ற அயலவர் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையைடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு படையினருடன் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
வவுனியா வளாக யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இதுபோன்ற தீ பரம்பல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .