2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாந்தை கிழக்கில் 9396 பேர் மீளக்குடியமர்ந்துள்ளனர்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாந்தைகிழக்கில் உள்ள பதினைந்து கிராம அலுவலர் பிரிவில் 2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர் மீளக்குடியமர்ந்துள்ளதாக திங்கட்கிழமை (26) நடைபெற்ற மாந்தைகிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்காக 1,570 நிரந்தர வீடுகள் இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 914 வீடுகள் அமைக்கப்பட வேண்டியுள்ளன.

இதனைவிட 455 வீடுகள் பகுதி திருத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 63 வீடுகள் திருத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. 2334 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இன்னமும் 50 குடும்பங்களுக்கு தேவையாகவுள்ளது.

மேலும், 44 தனிப்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 815 கிணறுகள் அமைக்க வேண்டியுள்ளது.

பிரதேச செயலரால் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .