2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 29

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.மு 480: தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை, பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.

1227: புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக், சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.

1567: பிரான்சில். இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.

1833: மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.

1848: ஹங்கேரியப் படையினர், குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.

1850: இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.

1885: உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி, இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.

1911: இத்தாலி, ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.

1916: ஜோன் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.

1918: முதலாம் உலகப் போர் - பல்கேரியா, கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

1938: செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.

1941: உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள், நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.

1962: கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.

1969: இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்திய சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர, உயிரிழந்தார்.

1971: அரபுக் கூட்டமைப்பில், ஓமான் இணைந்து கொண்டது.

1972: ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.

1991: எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1993: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

1998: இலங்கை, பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.

2003: சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .