2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குறையை உணர்வதே மேன்மை தரும்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலம் தங்களுக்குக் கெடுதல் செய்துவிட்டதாகப் பலர் சொல்வதுண்டு. உண்மையில் காலங்களைக் கருக விட்டவர்களே பலகோடி மக்களாவர்.

இருக்கும் காலத்தில் இயங்காமலும் மேலும், எதிர்காலத்​தினைக் கருதாமல் இயங்க மறுத்து, எதிர்காலத்தையும் மறந்து வாழ்கின்றவர்கள் காலத்தை எப்படிக் குறைகூற முடியும்? 

கால, நேரம் எல்லோருக்குமே பொதுவானது. ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டதுமல்ல; அவரவர்கள் அதனைப் பயன்படுத்தும் விதத்தில் வெற்றி, தோல்விகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

சில சமயங்களில் இடர்கள் வந்திடும். ஒருவரின் தொடர்ந்த அயராத உழைப்பு, இதனைத் தகர்த்து, மேல் நோக்கிய நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்து விடுகின்றது.  

குறை எங்கே என உணர்வதே மேன்மை தரும். 

வாழ்வியல் தரிசனம் 30/09/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .