2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமூர்த்தி வங்கியில் பண மோசடி: எழுவர் இடைநிறுத்தம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா        

செவனகலவிலுள்ள வாழ்வின் எழுச்சி சமுர்த்தி வங்கியில், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு உத்தியோகத்தர்கள், இன்று முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் தமது பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளரின் உத்தரவுக்கமைய செவனகலை பிரதேச செயலாளர் சந்தனலொக்குஹேவகே  மேற்படி எழுவருக்கும் இடைநிறுத்தக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

இவ்வங்கியில் இலட்சக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகள் பாவிக்கப்பட்டு பண மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .