Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை, தோட்ட அதிகாரி வழங்க மறுத்ததையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (21), லிந்துலை டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள், தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டிருந்தனர்.
ஏனைய பிரதேசத்திலுள்ள உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் தங்களது தோட்ட மக்களுக்கு மாத்திரம் முற்பணம் வழங்கப்படவில்லை என்றும் தோட்ட மக்கள் இதன்போது தெரிவித்தனர்.
இன்று காலை, தோட்ட தொழிற்சங்க தலைவர்களும் தொழிலாளர்களும், தோட்ட காரியாலயத்துக்குச் சென்று தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரிய போது, தோட்ட அதிகாரியால் வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் கம்பனி வங்கியில் வைப்பு செய்யவில்லை என்றும் வைப்பு செய்தால் பணத்தை 24ஆம் திகதி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே இருப்பதால், 24ஆம் திகதி தீபாவளி முற்பணத்தை பெற்று, தங்களது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்று கோரி, தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்தோடு, தீபாவளி பண்டிகைக்காக, தொழிலாளர்களின் மாத சம்பளத்திலிருந்து மாதாந்தம் பிடித்து சேமித்து வைத்திருக்கும் தொகையையும், தோட்ட நிர்வாகம் வழங்குவதற்கு மறுக்கின்றது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .