Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்
உயிரிழந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரில், ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விபத்தால் மற்றைய மாணவனும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) என்ற மாணவனின் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உடல்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
விபத்து நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது, பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தை ஆக்கிரமித்தனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் மாணவன் ஒருவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அதனை சட்ட வைத்தியதிகாரி வெளிப்படுத்தவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .