2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். கோகுலன்

வெலிமடை கெப்பெடிபொல பகுதியிலுள்ள எரபெத்த ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) குளிக்கச்சென்ற 16 வயது பாடசாலை மாணவனொருவர் காணாமல் போயிருந்த நிலையில், திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பெடிபொல மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த, கெப்பெடிபொல ஹிம்பிலியகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சீ.ஜ.மாரசிங்ஹ என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தனது மேலதிக வகுப்புக்களை முடித்துக்கொண்ட மாணவன், சக மாணவர்களுடன் குறித்த ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். இதன்போது, அவர் காணாமல் போயிருந்தார்.

சம்பவம் குறித்து அறிந்த பிரதேச வாசிகள் குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய நிலையில், சிறுவனது சடலத்தை பொலிஸார்  மீட்டுள்னர்.

இந்தச் சம்பவம் தொடபில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .