2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'சுடுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை'

George   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் கட்டளையை மீறிச் செல்கின்ற வாகனத்தின் மீது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு எவ்விதமான அதிகாரங்களும் இல்லை என்றும், அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வது தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

தப்பிச்செல்லும் வாகனம் தொடர்பில் அடுத்த பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் அல்லது அவ்வாறானவர்களை மறைந்துசென்று கைதுசெய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பொலிஸார் கட்டளையிடுவார்களாயின் அக்கட்டளைக்கு வாகனத்தில் இருப்போர் கட்டுப்பட்டு, முறையான வகையில் பதிலளிக்கவேண்டியது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .