2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

கைதடி, நுணாவில் பகுதியில் 11 நாட்களேயான சிசு, தாய்ப்பால் புரைக்கேறி, இன்று புதன்கிழமை (26) அதிகாலை உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுணாவில் பகுதியைச் சேர்ந்த ரவீச்திரசர்மா பிரகதீஸ்சர்மா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நித்திரையிலிருந்து எழுந்த சிசுவுக்குத் தாயார், அதிகாலை 12.30 மணியளவில் தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் அருந்திய பின்னர் சிசுக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிசுவை, வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, சிசு, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .