Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
George / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசியல் கைதிகளை காலதாமதமின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ஏற்பாட்டர்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாகணத்தில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்று வந்த இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .