Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 30 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓரளவு முன்னேற்றமான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், அத்தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடினமான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், மிகவும் சிறப்பான இந்திய அணிக்கெதிராக 2-2 என்ற நிலையில் காணப்பட்ட நிலைக்கு, சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். அது மிகவும் அற்புதமான செயற்பாடு. ஆனால், இறுதித் திறமை வெளிப்பாட்டைத் தாண்டிப் பார்க்க முடியாதுள்ளது" என்றார். 5ஆவது போட்டியில், அவ்வணி பெற்றுக் கொண்ட 76 ஓட்டங்கள் என்ற மோசமான துடுப்பாட்டப் பெறுபேறு தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"துடுப்பாட்டப் பிரிவாக, நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். இந்திய அணியிலிருந்த சுழற்பந்து வீச்சாளர்கள், சிறப்பாகப் பந்துவீசினர். ஆனால், 8 விக்கெட்டுகளை 20 அல்லது அதற்கு அண்மையானஓட்டங்களுக்கு விட்டுக் கொடுப்பதை அது நியாயப்படுத்தாது" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொடரில், துடுப்பாட்ட வீரர்களில் டொம் லேதம், அற்புதமாக விளையாடினார் என்று குறிப்பிட்ட வில்லியம்ஸன், இந்தத் தொடரின் குறிப்பிடத்தக்க வீரராக, சுழற்பந்து வீசும் சகலதுறை வீரரான மிற்சல் சான்ட்னெர் அமைந்தார் என்றார்.
"அவர் அற்புதமாக இருந்தார். இளைய வீரர், புதிதாக அணிக்குள் வந்தவர். இங்குள்ள ஆடுகள நிலைமைகள், சுழற்பந்து வீச்சாளருக்குச் சாதகமானவை என்ற போதிலும், இங்கு வரும் ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறுவதுண்டு. ஆனால் மிற்ச், ஒவ்வொரு நாளும் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். அவரது துடுப்பாட்டத்தையும் களத்தடுப்பையும் மறக்கவியலாகாது" என, வில்லியம்ஸன் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .