2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

அக்கிராசனத்தில் மர்மநபர்

Kanagaraj   / 2016 நவம்பர் 18 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

நாடாளுமன்றத்தில் சபைக்குள் இருக்கின்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ ஆசனமாக அக்கிராசனத்தில் முதன்முறையாக யாரோ ஒருவர் அமர்ந்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பொறியியலாளர் ஒருவரே, அக்கிரானத்தில் அமர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம், புதன்கிழமை இரவுவேளையிலேயே இடம்பெற்றுள்ளது. சபையமர்வு புதன்கிழமை இரவு 7 மணியளவில் நிறைவடைந்ததன் அதன் பின்னர், அவைக்குள் துப்பரவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போதே, மேற்படி பொறியியலாளர் அக்கிராசனத்தில் அமர்ந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதனை, ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரே கண்டுள்ளார்;. அவரே, இந்த விவகாரத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று, முறையிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற உள்ளிட்ட உயரியதன்மை கொண்ட சபாநாயகரின் ஆசனத்தில், பிரிதொருவர் அமர்வது என்பது சபாநாயருக்கும் அப்பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஆசனத்தில் வேறு நபர்கள் அமரமுடியாது என்பதை போல, அவைக்குள் இருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரின் ஆசனங்களில் வேறெவரும் அமரமுடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X