Thipaan / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
நடராஜா ரவிராஜ் எம்.பியின் படுகொலை வழக்கின் 16ஆவது சாட்சியாளர் நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, வழக்கை நாளை புதன்கிழமை வரை ஒத்திவைத்தார்.
16ஆவது சாட்சியாளரை, மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், சாட்சியாளர், ஆஜராகவில்லை என நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்தே, நீதிபதி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்ததுடன், சாட்சியாளருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .