2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ரட்ணசிறியின் வீடு சம்பந்தனுக்கு கையளிப்பு

George   / 2017 ஜனவரி 13 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவுள்ளது.

அவர் தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவரான் இரா.சம்பந்தன், வீடு சின்னமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0

  • niyayam Sunday, 15 January 2017 10:41 AM

    வீடு கிடைத்து விட்டது. மக்களுக்கு சுபீட்சம் தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X