Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 19 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறையில்; 2,500 ஹெக்டேயரில் இறப்பர்; செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக் கைத்தெமாழில் அமைச்சர் தயா கமகே, இன்று (19) தெரிவித்தார்.
'பெருந்தோட்டச் செய்கையின் பலம் கிராமங்கள் தோறும்' எனும் திட்டத்தின் கீழான இச்செயற்றிட்டத்துக்காக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சானது 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.
இதற்குத் தேவையான இறப்பர்க் கன்றுகளை வழங்குவதற்கான நாற்றுமேடை அம்பாறை, இறவெனப் பிரதேசத்தில் 50 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பதியத்தலாவ, மகாஓயா ஆகிய ஆகிய பிரதேசங்களில் 70 ஹெக்டேயரில் இறப்பர்ச்; செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 409 குடும்பங்களுக்கு 88 இலட்சம் ரூபாய் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .