2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் ஆழ்கடல் இயந்திரப் படகுகளுக்கு தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் நீரகவளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் அவரது அமைச்சு அலுவலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் ஆழ்கடல் இயந்திரப் படகுகளுக்கு தொலைத்தொடர்புச் சாதனங்களை வழங்குவதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .