2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நெடுந்தாரகை படகு சேவை நேற்று ஆரம்பம்

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.விக்னேஷ்

யாழ். நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை, நேற்று வெள்ளிக்கிழமை முதல் குறிகாட்டுவனிலிருந்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .