2024 மே 14, செவ்வாய்க்கிழமை

மெரினாவுக்குச் செல்ல லோரன்ஸ்- ஜி.விக்குத் தடை

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களின் போராட்டத்துக்கு கடந்த ஒருவாரமாக முழு ஒத்துழைப்பு கொடுத்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராகவா லோரன்ஸ், மாணவர்களின் நிலையை அறிய மெரினா செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்கள் பாதியிலேயே பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ராகவா லோரன்ஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் அந்த இடத்தை விட்டு அகலாமல் பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தி மெரின்னாவுக்கு செல்ல முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களை வெளியேற்ற காவல்துறை முயற்சி செய்தால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம் என மாணவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதால், பொலிஸார், தற்போது போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .