2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நுகர்வோர் அதிகார சபையினரின் வேட்டையில்: 56 பேர் சிக்குண்டனர்

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால், 137 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்ட போது, அரிசியை அதிக விலையில் விற்பனை செய்த 56 வியாபாரிகள் சிக்கிக்கொண்டனர்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது.

கொழும்பு மாவட்டத்தில் 13 வர்த்தகர்களும் கண்டியில் 12 வர்த்தகர்களும் குருநாகலில் 10 வர்த்தகளும் அநுராதபுரத்தில் 8 பேரும் வவுனியாவில் 7பேரும் பொலன்னறுவை மற்றும் கேகாலையில் 6 வர்த்தகர்களுமென, 56 பேர்,  இந்த சுற்றிவளைப்பின் போது சிக்கிக்கொண்டனர்.

நுகர்வோர் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலும், சில வியாபார நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாக, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை அதிகாரிகளின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்.

சனி, ஞாயிறு போயா தினங்களிலும் விடுமுறைகள் என்று பாராது கடமையில் ஈடுபட்டு பாவனையாளர்களின் நன்மை கருதி செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், உள்நாட்டு அரிசி மற்றும் இறக்குமதி அரிசியை வகைப்படுத்தும் வகையில், விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைக்குமாறு, வர்த்தகர்களிடம் அமைச்சர் கோரியுள்ளதுடன், மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு, கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .