2024 மே 08, புதன்கிழமை

மரண அச்சுறுத்தல் குறித்து சிறைச்சாலையில் விசாரணை

George   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தும்பர சிறைச்சாலை அதிகாரியின் வங்கி கணக்கு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் உறுப்பினரை அதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தலைமையகம் விசார​ணைகளை ஆரம்பித்துள்ளது.

தும்பர சிறைச்சாலை  அதிகாரியின் வங்கி கணக்கில் 20 இலட்சம் ரூபாய் வைப்பிடப்பட்டமை தொடர்பில்  விசாரணை செய்ய​வே இந்த குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த உறுப்பினருக்கு பதிலாக மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X