2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சொந்த அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் வந்தார் சுமந்திரன்

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன், அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பலத்த பாதுகாப்புடன் கலந்து கொண்டிருந்தார்.

அவரது அலுவலகத்திற்குள்ளும் அலுவலகத்துக்கு வெளியிலும் சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இளைஞர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, பருத்தித்துறையிலுள்ள சுமந்திரனின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.

எனினும், சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க  நியமிக்கப்பட்டிருக்கின்ற அதிரடிப்படையினர், வாகமொன்றில் அங்கு வந்த போதும், நிகழ்வு நடைபெறும் பகுதியில் நிற்கவில்லை. அவர்கள் வேறு இடத்திற்கு அனுப்பட்ட நிலையிலேயே  நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, கட்சியில் புதிதாக இணைந்து கொள்ளும் இளைஞர்கள், கட்சி அங்கத்துவப் படிவங்களை நிரப்பி, கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா மற்றும் துணைப் பொதுச் செயலாளரான சுமந்திரன் உள்ளிட்டவர்களிடம் வழங்கி கட்சி அங்கத்தவர் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X