2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உரம் வழங்காமையால்: உரிமையாளர்கள் அவதி

Kogilavani   / 2017 மார்ச் 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்கப்படும் உரம், கடந்த இரண்டு வருடங்களாகக் கிடைக்கவில்லை என, பலாங்கொடையை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பலாங்கொடை, இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இட்டுவல, இராவணாவ, குறுபே போன்ற பிரிவுகளில் வசிக்கும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக மானிய உரம் வழங்கப்படாதுள்ளது.

தேயிலைச் செடிகளுக்கு, உரிய நேரத்தில் உரம் போடாதக் காரணத்தினால், தேயிலை விளைச்சல் குறைந்துள்ளதாகவும் இதனால், தாம் பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .