2024 மே 08, புதன்கிழமை

ஏப்ரலில் தொழிற்சங்க நடவடிக்கை

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகம் (சைட்டம்) தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் இன்னும் சில தொழிற்சங்கங்களும், காலவரையறையற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள், ஏப்ரல் மாதத்தில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

இது தொடர்பான தங்களது கோரிக்கைகள், கலந்துரையாடல்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு, இதுவரை பதில்கள் வழங்கப்படாத நிலையில், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பல்வேறு பிரிவுகள், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது. 

இது தொடர்பான போராட்டங்களில் கலந்துகொள்வதற்கு, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பல்வேறு தொழிற்சங்கங்கள், அரச வேகை தாதியர்கள் ஒன்றியம் ஆகியன, இதில் இணைந்துகொள்ள, தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நளிந்த ஹேரத் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X