2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தீ விபத்தினால் மூன்று வீடுகள் பாதிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

சென்.கிளயார், டெவோன் பிரிவு தோட்டக் குடியிருப்பில், இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால்,  ஒரு வீடு முற்றாகவும், ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் எரிந்துள்ளது.

18 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பிலே, இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்தினால் மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளில் குடியிருந்த3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர், அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவ ஆரம்பித்தப் போது வீடுகளில் ஒருவரும் இருக்கவில்லை எனவும், எனினும் அயலவர்களின் முயற்சியால் தீ  ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தீ விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .