George / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 1 வருட கால சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறி, காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சி் கல்லூரியில் சனிக்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்டது.
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, முதற்கட்டமாக இப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இப் பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின், பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் முதலாவது, 1வருட சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறி இதுவாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .