2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, யக்கலமுல்லப் பகுதியில், 8 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்களைத் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலைத் தோட்ட உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்துள்ள குறித்த இரு மாணவர்களும் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளன​ரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

​அலைபேசிகள் இரண்டு, 8,000 ரூபாய் பணம் மற்றும் ​வீட்டுப் பொருட்கள் பலவற்றைக் குறித்த மாணவர்கள் இருவரும் திருடியுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருட்டுப் போன பொருட்களை மீட்டுள்ள யக்கலமுல்லப் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களான மாணவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .