2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காணிப்பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

ஜனாதிபதியின் 'நிலமெகவர' மக்கள் சேவையின் தேசிய திட்டத்துக்கு அமைவாக காணி அமைச்சும், காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கரைச்சி பிரதேசத்துக்குட்பட்ட  காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடமாடும் சேவை, கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று (24) இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையில் கரைச்சி பிரதேசத்துக்குட்பட்ட 60 வரையான காணிப் பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

கண்டாவளை, பளை, பூநகரி  ஆகிய பிரதேச பிரிவுகளுக்குரிய இந் நடமாடும் சேவை, கண்டாவளை, பளை, பூநகரி  ஆகிய பிரதேச செயலகங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (25) இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .