2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை தேசிய விமான சேவைக்குப் பாராட்டு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையானது, அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கூடுதல் வருமானத்தை ஈட்டி வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள சவூதி ​அரேபிய ஊடகமொன்று, இலங்கை தேசிய விமான சேவையானது, மத்திய கிழக்கிலிருந்து மேலும் ஊக்குவிப்பைப் பெற முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.  

இன்று 24ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை, இந்த விமான சேவைக் கம்பனி, இந்தப் பிராந்தியத்தில் புதிதாக சேவைகளை நடத்தவுள்ளது.  

டுபாயிலுள்ள அரேபியன் ட்ரவல் மார்கெட்டில், ஏற்கெனவே ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இருப்பது இதற்கு மிக வசதியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

மத்திய கிழ​க்கு, இந்திய உப-கண்டம், தூரக் கி​ழக்கு, தென் கிழக்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களை மிக சுமூகமாக இணைக்கும் வகையில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், அமைவிடத்தைக் கொண்டுள்ளது. இது, கேந்திர முக்கியத்தும் வாய்ந்த இடத்தில் இருப்பதனாலும் பலமான மார்க்க வலையமைப்பைக் கொண்டிருப்பதனாலும் சாத்தியமாகிறது.  

இந்த விமான நிறுவனம், சுற்றுலாப் பயணிகளையும் வேலை நிமித்தம் பயணிப்போரையும், மத்திய கிழக்கு, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் சிறப்பாக செயலாற்றியுள்ளது. தூரக் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கு பயணிக்க மாற்று வழியாகவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தற்போது பிரபலமாகி வருகின்றது.  

விமானச் சேவைகளுக்கான கிராக்கி அதிகரித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், இப்பிராந்தியங்களுக்கான சேவையை அதிகரித்துள்ளது. அந்தவகையில், டுபாய், அபுடாபி, டோகா, றியாத், பாறின், குவைத் ஆகிய இடங்களுக்குத் தினமும் ஒரு சேவையை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நடத்தி வருகின்றது. கேள்வியைப் பொறுத்து, வளைகுடாவில் ஏனைய பகுதிகளிலும் தனது சேவையை விஸ்தரிக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் எதிர்பார்த்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X