2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 13

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1111: ஐந்தாம் ஹென்றி, புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.

1605: ரஷ்யாவின் சார் மன்னன், பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.

1829: பிரித்தானிய நாடாளுமன்றம், ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.

1849: ஹங்கேரி நாடு குடியரசானது.

1861: அமெரிக்க உள்நாட்டுப் போர் - சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.

1868: பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள், மக்டாலாவைக் கைப்பற்றியதில், அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.

1873: ஐக்கிய அமெரிக்காவின் லூசியானாவில், கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில், 105 கறுப்பினத்தவர்களும் 3 வெள்ளையினத்தவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

1919: ஜாலியன்வாலா பாக் படுகொலை - அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி, பிரித்தானியப் படையினர் சுட்டதில், 379 பேர் உயிரிழந்தனர்.

1930: மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்துக்கு ஆதரவாக, தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.

1939: இந்தியாவில், இந்தியச் செம்படை என்ற இராணுவ அமைப்பு, பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

1941: ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில், அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.

1943: இரண்டாம் உலகப் போர் - போலந்தில் கட்டின் என்ற இடத்தில், சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக, ஜெர்மனி அறிவித்தது.

1945: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில், ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1953: இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.

1954: காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

1970: அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.

1974: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.

1975: லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1979: இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1984: இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.

1987: மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம், போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது.

1997: டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.

2006: கூகிள் கெலண்டர் (நாட்காட்டி) வெள்ளோட்டம் விடப்பட்டது.

2007: பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி, தற்கொலை செய்து கொண்டார்.

2012: வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .