Yuganthini / 2017 மே 12 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்கிய ஹெலியினால் பெண்ணொருவர் காயத்துக்கு உள்ளாகிய நிலையில், டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில், இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன்,டன்பார் மைதானத்தில் வந்திறங்கிய மோடியின் ஹெலியில், அதிகவலு கொண்ட காற்று வீசியமையினால், மைதானத்தை அண்மித்த சமனகம பகுதி குடியிருப்பொன்றில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதனால், அந்தப்பெண் காயத்துக்கு உள்ளாகிய நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக, டிக்கோயா வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .