2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

'படுகொலைகளுக்கு தீர்வு; இலங்கையில் வரலாறு இல்லை'

George   / 2017 மே 15 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“நீதி செத்துவிடவில்லை. நீதிக்கான கோரல் தொடரும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற  படுகொலைகளை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வுகள் நெடுந்தீவில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. அவற்றில் சிலவற்றை மாத்திரமே நினைவு கூர்ந்து வருகின்றோம். அனைத்து படுகொலைகளும் திட்டமிட்ட இன அழிப்பு ஆகும்.

படுகொலைகள் தொடர்பான தீர்வுகள் வழங்கப்பட்டதாக இலங்கை வரலாற்றிலேயே இதுவரை இல்லை. ஆனால் இனியும் அவ்வாறு இருக்க அனுமதிக்க மாட்டோம். சர்வதேசத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X