2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

விபசார நிலையம் என சந்தேகம்: நான்கு பெண்கள் கைது

George   / 2017 மே 17 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மேற்கு பகுதியில் இயங்கிவந்த விபசார நிலையம் என சந்தேகிப்படும் வீடு, பொலிஸாரால் இன்று மதியம்  முற்றுகை இடப்பட்டுள்ளது.

இதன்போது பாலியல்  தொழிலில்  ஈடுபட்டதாக  சந்தேகிக்கப்படும்  நான்கு பெண்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிளிநொச்சியில்  குறித்த விபசார  நிலையம் இயங்கி வருவதாக,  கிளிநொச்சி மற்றும்  முல்லைத்தீவு  பிரதிப்  பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீடு சோதனையிடப்பட்டது.

சிவில் உடையில் பொலிஸ் உத்தி​யோகத்தரை அந்த வீட்டுக்கு அனுப்பி, உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பொலிஸார் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X