.jpg)
(கவிசுகி)
யாழ். பண்ணைப் பாலத்திலிருந்து லொறி கடலுக்குள் பாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. வேகமானச் சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கடலுக்குள் பாய்ந்துள்ளது.
லொறியின் சாரதியும் மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
.jpg)
.gif)
