அரச மற்றும் தனியார் வங்கிகள் சில, கடன் வழங்குவதை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தலுக்கிணங்க தனிநபர்களுக்கான கடன் வழங்கலை மட்டுப்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தனியார் வங்கியொன்றின் உயர் அதிகாரியொருவர் லங்காதீபவுக்கு தெரிவித்தார்.வீட்டுக்கடன்கள் மற்றும் ஏனைய தனிநபர்களுக்கான கடன் வழங்கல் தற்போது 50 சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறைவேற்றதிகாரிகள் மற்றும் உயர் பதவிவகிக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரம் கடன் வழங்குவதற்கு தமது வங்கி தீர்மானித்துள்ளதாகவும் அவ்வதிகாரி கூறினார். (லங்கா தீப)
.gif)
