2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆடை திருடி பங்குபோட்டவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

ஆடை திருடி அதனை இறைச்சிக்காக வெட்டி பங்குபோட்ட குற்றத்தில் கைதானவருக்கு இரண்டுவார காலத்திற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் ஆடொன்றை திருடியதுடன் அதனை இறைச்சிக்காக வெட்டி பங்குப்போட்டுள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து சாவகச்சேரி பொலிஸார் குறித்த நபரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதுசெய்ததுடன் இறைச்சியையும் மீட்டுளளனர்.

இந்நிiலியல் இந்நபர், நேற்று வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X