Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 86 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை திமுத் கருணாரத்ன அடைந்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் 77 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட், ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 154 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் டொம் லேதம், 13ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாடவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, 16ஆம் இடத்திலிருந்து ஒன்பது இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் கேமார் றோச், 11ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் 143 ஓட்டங்களுடன், நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் சகலதுறைவீரர் பென் ஸ்டோக்ஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்திருந்தார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .