2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அனுஷ்கா மீது அவதூறு புகார்

Editorial   / 2020 மே 28 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி. அவர் தற்போது இணைய தொடர்களை தயாரித்து வருகிறார்.

அண்மையில் அவர் தயாரித்த ‘பாதல் லோக்’ என்ற இணைய தொடர் வெளியானது. இந்த தொடரில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட இன மக்களை அவதூறாக சித்திரித்திருப்பதாக அந்த இன மக்களின் பிரதிநிதிகள், தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த அமைப்பின் இளைஞர் பிரிவினர் விளக்கம் கேட்டு அனுஷ்காவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்டுவிட்டு தொடரை நிறுத்த வேண்டும். என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .