2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் மொட்டு உறுப்பினர் பலி

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹக்மன- கெம்பிலியபொல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஹக்மன பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரொருவர் உயிரிழந்துள்ளாரென, ஹக்மன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழிந்த 53 வயதான மெனிக் சாந்தவும் இரத்தினக்கல் வர்த்தகரெனவும், சம்பவம் இடம்பெற்ற ​போது, மெனிக் சாந்தவும் மேலும் இருவரும்  ஹக்மன பிரதேசத்திலுள்ள காணி ஒன்றை விற்பனை செய்வது தொடர்பில், கலந்துரையாடலில் ஈடுபட்டுக்  கொண்டிருந்த  போது, வான் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத சிலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், கத்தியால் குத்தியும் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பன விசாரணைகளை ஹக்மன பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .