2024 மே 11, சனிக்கிழமை

காதல் கைகூடுமா?

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொல்லப்பட்ட காதலைவிட சொல்லப்படாத காதல்களே அநேகம். இதுபோன்ற சோகம், உங்களில் பலருக்கும் உண்டு. காதலிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமல்ல. 

ஆனால், பல அப்பாவிகள் இன்னமும் தங்கள் நியாயபூர்வமான காதலை வெளிப்படுத்தாமல், அந்த இனிய காதலைக் காப்பாற்றி, கரையேறாமல் மனதை அழித்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  

ஒருதலைக் காதல் கொண்ட பேர்வழிகள், தங்கள் காதல் கைகூடுமா? அது சரிவராதா? எனப் பேதலிப்பதைவிட, அதைச் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பது, தண்டனைக்குரிய குற்றமே இல்லை. 

ஒருவரை ஒருவர் விரும்பியும் கூட, ஒரு சொல்கூடப் பேசாமலே, கரைந்து உடைந்த காதல் கதைகள் கோடி. 

இவர்கள் திருமண வாழ்வை, வேறு ஒருவருடன் கலந்தபின்பு, வருடம் பல கடந்தும் ஒருவருக்குள் ஒருவர் மனம் மறுக்க, இறுகிய வாழ்வுடன் இழந்து நிற்பது கொடுமையோ கொடுமை. 

   வாழ்வியல் தரிசனம் 24/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .