2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 08

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

1509: இந்தியாவில் விஜய நகர பேரரசின் முதல் மன்னராக கிருஷ்ணதேவ ராயர் முடிசூடினார்.

1768: ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.

1848: மாத்தளை கிளர்ச்சி - இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.

1863: அமெரிக்க உள்நாட்டுப் போர் - டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.

1908: வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.

1942: இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1945: இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.

1945: ஐ.நா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நா.வில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.

1947: பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.

1949: பூட்டான் சுதந்திரம் பெற்றது.

1963: பிரிட்டனில் ரயிலொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் 26 லட்சம் ஸ்ரேலிங் பவுண் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

1967: ஏசியான் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1973: தென்கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.

1974: வாட்டர்கேட் ஊழல் விவகாரம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தான்  ராஜினாமா செய்வதாக ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.

1988: மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.

1989: ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா, கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1990: குவைட்டை கைப்பற்றிய ஈராக், அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1992: யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில், இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

2000: அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டமைப்பினரின் எச்.எல்.ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

2006: திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007: நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை, கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .