2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூலை 24

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

1911 :  பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார்.

1915 : சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.

1922 : பாலஸ்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது.

1923 : கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்ஸர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.

1924 : பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் – பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜேர்மனியின் ஆம்பர்கு நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர். 280,000 கட்டடங்கள் அழிந்தன.

1959 : மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணைத் தலைவர் ரிச்சார்ட் நிக்சனும் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ்வும் புகழ் பெற்ற அடுப்படி விவாதத்தில் கலந்து கொண்டனர்.

1969 : நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1977 : லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4 நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982 : ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மண்சரிவால் 299 பேர் உயிரிழந்தனர்.

1983 - இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. ஈழப்போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.

1991 : இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

2001 : கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்- கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

2007 : லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலத்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.

2013 : எஸ்ப்பானியாவில் விரைவுத் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில், 78 பயணிகள் உயிரிழந்தனர்.

2014 : புர்க்கினா பாசோவில் இருந்து அல்ஜியர்சுக்கு சென்று கொண்டிருந்த ஏர் அல்சீரியா விமானம் 5,017 மாலிவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 116 பேரும் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .