2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : மார்ச் 26

Editorial   / 2019 மார்ச் 26 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1917 : முதலாம் உலகப் போர் - காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.

1934 : ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 : இரண்டாம் உலகப் போர் - போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு முதற்றடவையாக பெண்கள் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.

1945 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.

1954 : மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

1958 : ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

1971 : கிழக்கு பாகிஸ்தான் பாக்கிஸ்தானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.

1979 : அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய - இஸ்ரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1991 : அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1997 : சொர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.

1998 : அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 : மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

2000 : விளாடிமீர் பூட்டின் ரஷ்சியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.

2005 : தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.

2006 : முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

2007 : கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

2010 : தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .