2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

10 மில். நிதியொதுக்கீட்டில் ஐந்து கொங்றீட் வீதிகள்

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்ஷாத், ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

தேசிய நல்லிணக்க அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள ஐந்து வீதிகளை கொங்றீட் வீதிகளாகப் புனரமைக்கும் வேலைத்திட்டம், வைபரீதியாக இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதற்கமைய, மிக நீண்டகாலமாகப் புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்த அட்டாளைச்சேனை சந்தை வீதி, மத்திய வீதி, றஹ்மானியாபாத் குறுக்கு வீதி, பாலமுனை ஜும்ஆ பள்ளிவாசல் வீதி, ஒலுவில் அன்சாரி பள்ளி குறுக்கு வீதி ஆகியன கொங்றீட் வீதிகளாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச சபையின் பிரதித் தவிசாளார் எம்.எஸ்.ஜவ்பர் ஆகியோரின் வேண்கோளுக்கிணங்க, இந்நிதியொதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .