2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடிக்கடி மின் தடை; பாவனையாளர்கள் அசௌகரீயம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 29 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மின் பாவனையாளர்கள் பல அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் பகல் வேளையிலும் மற்றும் இரவு வேளைகளிலும் எவ்வித அறிவித்தலும் இன்றி திடீர் திடீரென மின்சாரம் தடைப்படுவதால், மின்சார பாவனைப் பொருட்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மின் தடை காரணமாக மாணவர்களின் கல்விக்கு தடங்கள் ஏற்படுவதாகவும், இம்முறை கா.பொ.த உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அலுவலக நேரங்களில் மின் தடைப்படுவதனால் அலுவலக கடமைகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .