2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு நாளை

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில், தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில், நாளை (14) காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளதாக, பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.முகம்மது பாயிஸ் தெரிவித்தார்.

இந்தச் சபை அமர்வில், சகல உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளன.

அத்துடன், திண்மக்கழிவு முகாமைத்துவ நில நிரப்புகை நிலையத்துக்கு மின்சார இணைப்புப் பெறுவதற்காக சபையின் அனுமதி கோரல், வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அனுமதி கோரல், ஆலம் குளம் கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைப்பதற்கான அனுமதி கோரல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .