2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அலையில் அள்ளுண்ட சிறுவனைக் காணவில்லை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் கடல் பகுதயில் நேற்று (22) ஏற்பட்ட கொந்தழிப்புக் காரணமாக சிறுவன் ஒருவர், அலையில் அல்லுண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

பொத்துவில், குடாகலிவில் இரு சகோதரர்கள், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்கும் போது, திடீரென ஏற்பட்ட பாரிய அலையில் சிறுவன் அல்லுண்டு செல்லப்பட்டுள்ளாரெனப் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பசறிச்சேனை 19ஆம் பிரிவைச் சேர்ந்த சாஹுல் ஹமீது இப்லான் (வயது-14) என்னும் சிறுவனே, இவ்வாறு அலையில் சிக்குண்டு காணாமல் போயுள்ளார்.

கடற்படையினர், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .