2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தும் நடமாடும் வர்த்தக நடவடிக்கைகள் தடை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 மார்ச் 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை - அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி, வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நடமாடும் வர்த்தக நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளனவென, அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்தார்.

இந்த நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்வதாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள், ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறும், தவறும் பட்சத்தில் மாநகர சபை கட்டளைச் சட்டத்துக்கு அமைவாக, தங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தங்களின் வர்த்தக உடமைகளும் பறிமுதல் செய்யப்படுமெனவும், ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .