2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 11 வருடங்களின் பின்னர் மாவீரர் நினைவேந்தல்கள்

எஸ்.கார்த்திகேசு   / 2017 நவம்பர் 27 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாற்றில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லத்தில் 11 வருடங்களின் பின்னர் இன்று (27) மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இம்முறை பல சவால்களுக்கு மத்தியில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை அம்பாறையில் யுத்தநிறைவின் பின் முதன்முதலாக எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கஞ்சிகுடியாறு மாவீர் துயிலும் இல்லத்தில் இம்முறை மாவீரர்களின் நினைவேந்தல்களை அனுஷ்டிப்பதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான  பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் செய்யப்படவுள்ளது.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து 11வருடங்களின் பின் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் மாவீர்களுக்கு நினைவேந்தல்கள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில், இம்முறை மாவீரர்களின் குடும்ப உறவுகளால் இன்று திங்கடகிழமை 27ஆம் திகதி மாலை கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ள சுமார் 700 மாவீரர்களின் ஆத்மசாந்தி வேண்டி பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .