2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலைஞர்கள் கௌரவிப்பு...

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தால், 'கலைஞர் சுவதம்' பட்டம் வழங்கி கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது.

இதன்போது, அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன், கலாபூஷணம் என்.பி.அப்துல் மஜீட்டுக்கும், பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப், கலாபூஷணம் எம்.எல்.ஏ.கபூருக்கும் நினைவுச் சின்னமும் சான்றிதழும் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில், கலாசார உத்தியோகத்தர்களான எஸ்.கோகுலதாஸ், ஏ.எம்.தௌபீக், முஸ்லிம் சமய கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம்.முக்தார் ஹூசைன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .